திருப்பத்தூர், செப். 11: திருப்பத்தூரில் நகராட்சியில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து விசாரிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஆணையாளர் இல்லாமல் நகராட்சிப் பொறியாளர் அசோக்குமார் (பொறுப்பு) செயல்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக திருப்பத்தூர் நகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னை பம்மல் நகராட்சியிலிருந்து திருப்பத்தூர் புதிய நகராட்சி ஆணையராக சந்திரா ேநற்று பொறுப்பேற்றார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில் ‘ திருப்பத்தூர் நகராட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் நகராட்சியில் உள்ள சினிமா தியேட்டர்கள் கேளிக்கை வரி நகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளது. உடனடியாக செலுத்தாவிட்டால், சினிமா தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும்.