சேலம், செப்.9: தி காவிரி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சங்க தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் தோபிக்அகமது வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, சேலம் உருக்காலை முதுநிலை மேலாளர் (இயந்திரவியல்) பொறியாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். பொறியியல் கல்லூரிகளின் டீன் ஓபுளி, முதல்வர் துரைசாமி மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் பெஞ்சமின் லாசரஸ் ஆகியோர், சிறப்பு விருந்தினரை கவுரவித்தனர். டீன் ஓபுளி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் துரைசாமி பேசுகையில், ‘அரசு மற்றும் தனியார் துறைகளில் குவிந்து கிடக்கும் இயந்திரவியல் துறை வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்றார்.