தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

சேலம், செப்.9: இடைப்பாடியில் மாநில நல்லாசிரியர் விருதுபெற்ற, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இடைப்பாடி ஒன்றியம் இருப்பாளி காட்டுவளவு ஊராட்சியில், ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ரேணுகாவிற்கு தமிழக அரசின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை ஆசிரியர் ரேணுகாவிற்கு நல்லாசிரியர் விருதினை வழங்கினார். இதனையடுத்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில், பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாநில செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். வட்டாரத்தலைவர் இளையபெருமாள் வரவேற்றார். விழாவில், நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமை ஆசிரியர் ரேணுகாவிற்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநில செயலாளர் முனியசாமி, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில், நகர தலைவர் சாந்தி, செயலாளர் முருகையா, வட்டார செயலாளர் மலர்விழி, பொருளாளர் சாந்தி, ஆசிரியர்கள் அருள்தாஸ், ஈஸ்வரன் மற்றும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். நகர அமைப்புச் செயலாளர் சுமன்ராஜ் நன்றி தெரிவித்தார்.

Related Stories: