ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவு விபத்தில் கணவர் பலியானதால் மனமுடைந்த மனைவி தற்கொலை

ஜெயங்கொண்டம், செப். 9: ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் கணவர் பலியானதால் மனமுடைந்த அவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஜெயங்கொண்டம் அடுத்த தூத்தூர் அருகில் உள்ள மேலவரப்பன்குறிச்சியை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் குடும்பத்தாருக்கு கடன் தொல்லை அதிகரித்தது. இதில் மனமுடைந்த சச்சிதானந்தம் மகன் விஷம் குடித்து இறந்தார். கணவன், மகன் இறந்ததால் மன உளைச்சலில் சச்சிதானந்தத்தின் மனைவி மேனகா இருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் ஆபத்தான நிலையில் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தூத்தூர் போலீசில் மேனகா மகள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: