பள்ளி சென்ற மாணவி மாயம்

சாத்தூர், செப். 7: சாத்தூரை அடுத்த படந்தால் கிராமத்தில் இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகள் சித்ராமுத்துலெட்சுமி(16) இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த 23ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடுதிரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் சித்ராமுத்துலெட்சுமி கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக நேற்று முத்துராஜ் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம் பெண்ணை தெடி வருகின்றனர்.

Related Stories: