சாத்தூர், செப். 7: குடிநீர் எடுக்கச்சென்ற பெண்ணை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காந்திநகரை சேர்ந்தவர் கனகலெட்சுமி(53). இவர் தெரு குழாயில் குடிநீர் எடுக்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சீரஞ்சீவி சைக்கிளில் வந்து கனகலெட்சுமி மீதுமோதிவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தட்டிகேட்ட கனகலெட்சுமியை சீரஞ்சீவியின் தந்தை முருகன் மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் மூன்று பேரும் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.