குடிநீர் எடுக்கச் சென்றபோது பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் தாய், தந்தை, மகன் கைது

சாத்தூர், செப். 7: குடிநீர் எடுக்கச்சென்ற பெண்ணை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காந்திநகரை சேர்ந்தவர் கனகலெட்சுமி(53). இவர் தெரு குழாயில் குடிநீர் எடுக்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சீரஞ்சீவி சைக்கிளில் வந்து கனகலெட்சுமி மீதுமோதிவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தட்டிகேட்ட கனகலெட்சுமியை சீரஞ்சீவியின் தந்தை முருகன் மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் மூன்று பேரும் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  

இதில் படுகாயம் அடைந்த கனகலெட்சுமி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தாய், தந்தை, மகன் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: