வருசநாடு, செப்.7: கடமலை மயிலை ஒன்றியத்தில் வெறி நாய் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வருசநாடு, சிங்கராஜபுரம், முறுக்கோடை, வாழவந்தாள்புரம், தும்மக்குண்டு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு போன்ற பகுதிகளில் வெறி நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிபு என்ற கூலி தொழிலாளியை நாய் கடித்தது.
இவர் வருசநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிங்கராஜபுரம் கிராமத்தில் தங்கச்சாமி என்ற விவசாயியின் மூன்று பசு மாட்டை நாய் கடித்து மூன்று மாடுகளும் இறந்துவிட்டன. இதனால் சிறுவர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் தெருவில் நடக்கவும் விளையாடவும் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்