வரும் 12ம் தேதி திருமணம் : மணப்பெண் திடீர் மாயம்

அணைக்கட்டு, செப்.7: அணைக்கட்டு அருகே 12ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் திடீரென மாயமானார். அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அரசு ஐடிஐயில் படித்து வருகிறார். இவருக்கும், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்ைத சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இருதரப்பிலும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகின்றனர். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இருவீட்டாரும் செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 28ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை.இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: