எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவதானப்பட்டி, செப்.6: டெல்லியில் நடந்த விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளத்தில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை ஆதரித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பாக பெரியகுளம் எல்ஐசி அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐஐஇஏ சங்க கிளை தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சார்பாளர் ஷீலாதேவி விவசாயிகளின் பிரச்சனைகளை விளக்கி கூறினார். செயலாளர் அகமது ஆதம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிளைச் சங்க உறுப்பினர்கள், வளர்ச்சி அதிகாரிகள், சங்க உறுப்பினர்கள், முகவர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: