ஜெயங்கொண்டம்,செப்.5: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். போட்டியில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள சுமார் 58 பள்ளிகளிலிருந்து வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர்.
மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிசெல்வி பாராட்டி பேசினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், தாளாளர் பிரான்சிஸ், பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் செபாஸ்டியன்ஜேக்கப் வரவேற்றார். இறுதியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கஸ்பார்ஜோசப் நன்றி கூறினார்.