அரியலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 327 மனுக்கள் குவிந்தன

அரியலூர்.ஆக,21: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 327 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து பெற்றார். தொடர்ந்து, மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: