அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

அரியலூர், ஆக. 21: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி   தலைமை வகித்து உறுதிமொழி வாசிக்க அனைத்துத்துறை அதிகாரிகள் ஏற்று கொண்டனர். டிஆர்ஓ தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அலகு2 சார்பில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு கலை கல்லூரி முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அலகு2 மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கேரளா வெள்ள நிவாரண நிதியை திரட்டினர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜசேகர், இயற்பியல்துறை தலைவர் குமார், வரலாற்றுதுறை ஆனந்தகுமார் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: