அரியலூர், ஜூலை 26: அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் 6வது கட்டமாக அரியலூர், உடையார்பாளையம் வட்டங்களில் தலா 2 கிராமங்கள், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் தலா ஒரு கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நடந்து வருகிறது. அதன்படி அரியலூர் வட்டத்தில் பளிங்காநத்தம், கண்டிராதீர்த்தம் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் உதயநத்தம் (மேற்கு), உட்கோட்டை (வடக்கு) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் மணப்பத்தூர் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் சிலுவைச்சேரி கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. முகாமில் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.