கல்லக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு 400 காளைகள் சீறிபாய்ந்தன7 பேர் காயம்

அரியலூர்,ஜூலை 23: கீழப்பழவூர் அருகே நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 400 காளைகள் சீறிபாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள கல்லக்குடியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400 காளைகள் பங்கேற்றன. 150 வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஊரின் மைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிலிருந்து சீறிவந்த காளைகளை அடக்க முயன்ற கல்லக்குடி நாகராஜன் (35), கோவிலூர் சரத்குமார் (22) உட்பட 7 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த கீழப்பழுவூர் மணி (47), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விக்னேஷ் (21) ஆகிய இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் விழாக்குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories: