அரியலூர், ஜூலை 20: அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1,000 லிட்டர் ரூ.125க்கு விநியோகிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை , கல்வி நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து தேவைப்படும் தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு தேவைப்படும் குடிநீர் 1,000 லிட்டருக்கு ரூ.150 என்ற அளவில் தேவைக்கேற்ப வழங்கப்படும். தனியார் மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு 1,000 லிட்டர் ரூ.125க்கு வழங்கப்படும்.