அரியலூர் மாவட்டத்தில் மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு ரூ.125க்கு 1,000 லிட்டர் குடிநீர் விநியோகம் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர், ஜூலை 20: அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1,000 லிட்டர் ரூ.125க்கு விநியோகிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை , கல்வி நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து தேவைப்படும் தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு தேவைப்படும் குடிநீர் 1,000 லிட்டருக்கு ரூ.150 என்ற அளவில் தேவைக்கேற்ப வழங்கப்படும். தனியார் மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு 1,000 லிட்டர் ரூ.125க்கு வழங்கப்படும்.

அரியலூர் மாவட்டம் திருமானூர், அரியலூர் தா.பழூர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் இடங்களுக்கு அருகே உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர் வடிகால் வாரியத்தை அணுகலாம். விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் நிர்வாக பொறியாளர், ஊரக குடிநீர் திட்ட கோட்டத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விசுவநாதன்  தெரிவித்துள்ளார்.

Related Stories: