கீழையூரில் வருவாய்த்துறை சிறப்பு குறைதீர்முகாம்

அரியலூர், ஜூலை 7:  அரியலூர் மாவட்டம் மேலப்பழூர் கீழையூரில் வருவாய்த்துறையினரின் மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கை தொடர்பான 12 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அரியலூர் மாவட்டம் மேலப்பழூர் கீழையூரில் வருவாய்த்துறையினரின் 6ம் கட்ட மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்களை பெற்றார். இதையடுத்து மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய் தாசில்தார் முத்துலட்சுமி, சமூக பாதுகாப்பு தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியசாமி பங்கேற்றனர்.

Related Stories: