குடிபோதையில் ஐபிஎஸ் அதிகாரி வாகனத்தை எடுத்து சென்ற நபர் கைது

ஆவடி: குடிபோதையில் ஐபிஎஸ் அதிகாரி வாகனத்தை எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டு துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மண்டல இயக்குனர் அரவிந்தன் ஐ.பி.எஸ். தலைமையில் செயல்பட்டு வருகிறது. இங்கு நுண்ணறிவு அதிகாரியாக பாரத் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்இரவு 10 30 மணி அளவில், மது போதையில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தொலை தொடர்பு அதிகாரி சுபேந்திர சர்மா என்பவரிடம், அரவிந்தன் ஐபிஎஸ் அதிகாரி பயன்படுத்தும்  கார் சாவியை சட்ட விரோதமாக பெற்றுக்கொண்டு, பூந்தமல்லிக்கு ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இருவர் மீது உதவி இயக்குனர் வேணுகோபால் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: