ஆவடி: குடிபோதையில் ஐபிஎஸ் அதிகாரி வாகனத்தை எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டு துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மண்டல இயக்குனர் அரவிந்தன் ஐ.பி.எஸ். தலைமையில் செயல்பட்டு வருகிறது. இங்கு நுண்ணறிவு அதிகாரியாக பாரத் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்இரவு 10 30 மணி அளவில், மது போதையில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.