டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாதா அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.7%-ல் இருந்து 1.09% ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.