திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன்(50). மீனவரான இவர் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் திடீரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார். தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு துறையினர் பூண்டி ஏரியில் பல இடங்களிலும் தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை.