வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வடசென்னை அனல்மின் நிலையம். இங்குள்ள,  முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 2வது நிலையின் 2வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 600மெகாவாட் மின் உற்பத்தி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: