புழல்: மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. மின்வாரிய ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா(45). இருவரும் நேற்று மதியம் சோழவரம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, டு வீலரில் மீஞ்சூருக்கு சென்றனர். செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, மீஞ்சூர்- வண்டலூர் சாலை வளைவில் திரும்பும்போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த லாரி, டு வீலர் மீது மோதியது. இதில், கீழே விழுந்த மஞ்சுளா லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.