சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற 30ம் தேதி தொடங்கி நடத்துவதென கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. மார்ச் 30ம் தேதி நடைபெறுகிற தொடக்க விழாவில் ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற 28ம் தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.