ஏழுகாய் குழம்பு

செய்முறை:

வெறும் வாணலியில் முதலில் அரிசி வறுத்துப் பிறகு எள் வறுத்து இரண்டையும் தனியே வைக்கவும். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பருப்புகள், மிளகாய், பெருங்காயம், தேங்காய்த் துருவல் வறுக்கவும். இத்துடன் வறுத்த அரிசி, எள் சேர்த்து மைய அரைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வேகவிடவும். காய்கள் அரைவேக்காடு வெந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மேலும் ¼ கப் நீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும் தாளித்து இறக்கவும். திருவாதிரை குழம்பு தயார். களி, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Related Stories: