வெண்ணெய் புட்டு

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊற வைத்து... நைஸாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இளம் பாகாகக் காய்ச்சவும். வெல்லப் பாகில் பாலை ஊற்றி, கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து நன்கு கிளறவும். மாவு சற்றே வெந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும். ஒரு பெரிய தட்டு எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி, செய்து வைத்திருக்கும் கலவையை அதில் போடவும். ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

Related Stories: