சவாரிக்கு சென்ற போது ஆட்டோ டிரைவர் கழுத்து அறுத்து கொலை-சித்தூரில் பரபரப்பு

சித்தூர் : சித்தூரில் சவாரிக்கு சென்றபோது ஆட்டோ டிரைவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் பாலாஜி நகர் காலனியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வடிவேல்(30), ஆட்டோ டிரைவர். இவருக்கு மது குடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை ஆட்டோ சவாரிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். பின்னர், நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அவரது செல்போனுக்கு சவாரிக்கு அழைப்பு ஒன்று வந்தது.

இதையடுத்து, அவர் ஆட்டோவை எடுத்து கொண்டு சவாரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு கோடிகுண்டா கிராமத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து, இரவு 8 மணி அளவில் அவரது குடும்பத்தினர் வடிவேல் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, செல்போன் ஸ்வீட் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சித்தூர் தாலுகா போலீசில் இரவு புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோடிகுண்டாவில் இருந்து சிறிது தூரத்தில் அவரது ஆட்டோ நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்த போது வடிவேல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை பிேரத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ அருகே மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இரவு நண்பர்களுடன் மது அருந்திய போது போதையில் அவரை கழுத்து அறுத்து கொலை செய்தார்களா? அல்லது யாராவது கடத்தி கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோர் டிரைவர் கழுத்து அறுத்து ெகாலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவேலின் தம்பியை சில மர்மநபர்கள் குத்தி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: