சென்னை: அரசு அலுவலகங்களுக்கு மக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் பத்திரப்பதிவு அலுவலகங்களை காட்டுப்பகுதிக்குள் செயல்பட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு குறித்து பத்திரப்பதிவுதுறை தலைவர், தூத்துக்குடி ஆட்சியர் நிலை அறிக்கை தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.