திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலை மீது மர்ம நபர்கள் வைத்த தீயால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது. இத்தீபம் ஏற்றப்பட்ட மலையின் மீது தீபம் ஏற்றுபவர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், துணை ராணுவப்படையினர் தவிர அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றி முடித்த பின்னர் பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.