கீவ்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா அதன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், 9 மாதங்களை கடந்து நீடிக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், விமானங்களை வழங்கி வருகின்றன. இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி `தெற்கு ரோஸ்டோவ் பகுதியில் இருந்து காஸ்பியன் கடல்பகுதியில் ரஷ்யா ஏவிய 38 ஏவுகணைகள், கருங்கடல் பகுதியில் இருந்து ஏவிய 22 ஏவுகணைகள் என நேற்று முன்தினம் ரஷ்ய படையின் 60 ஏவுகணைகளை வழிமறித்து அழித்தனர்.