அவனியாபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் நிர்மல்பிரபு (26). இவர், திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் வந்தார். திருமணம் முடிந்த பின்னர், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிர்மல் பிரபுவின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் தோட்டாவுடன் ஒரு துப்பாக்கி (ஏர் கன்) இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மேல் விசாரணைக்காக, அவனியாபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.