பாரிஸ்: இந்தியாவின் சுதந்திர வரலாற்றை எழுதியவர்களில் முக்கியமான எழுத்தாளரான டொமினிக் லேபியர் காலமானார். இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினையின் வரலாற்றைக் கூறும் புத்தகங்களை பலர் எழுதியிருந்தாலும், பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் (91) எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது. இப்புத்தகத்தின் இணை ஆசிரியர் லாரி காலின்ஸ் உடன் இணைந்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் எழுத்தாளர் டொமினிக் லேபியர், வயோதிகத்தின் காரணமாக காலமானார்.