தேங்காய் கொழுக்கட்டை

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கொதித்ததும் அரிசி மாவை தூவி, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி மாவு வெந்ததும் இறக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரில், வெல்லத்துருவல் போட்டு ஒரு கொதி வந்ததும் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி போட்டுக் கிளறி கையில் உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும். பூரணம் தயார். வெந்த அரிசி மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சொப்பு மாதிரி செய்து, 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

Related Stories: