மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக 76வது சுதந்திர தின பெருவிழா, அங்குள்ள வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி லிங்கநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வர் வி.முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட தியாகி வரதராஜன் கலந்துகொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.