உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் 76வது சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் வீரம்மாள் மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தலை தவிர்த்து மஞ்சப்பையினை படுத்திடவேண்டும். கிராமங்களில் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரினை அகற்றி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.