கும்மிடிப்பூண்டி பஜாரில் புதிய திமுக ஒன்றிய செயலாளர்கள்; அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், பேருர் செயலாளர் அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், அவைத் தலைவர் வேதாசலம், பூவலம்பேடு ஜோதிலிங்கம், முர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் சுகு, ரவி, சாந்தி, சரவணன், மஸ்தான், திருஞானம், உதயகாந்தம்மாள், ஏசுரத்தினம், சுரேஷ்குமார், திருமலை, துர்காதேவி வெங்கடேசன், கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் அ.இஸ்மாயில், ராமஜெயம், ஆர்.எஸ்.காளத்தி, ஜெயச்சந்திரன், ஜெயபிரகாஷம், முனிவேல், பரத்குமார், சின்னப்புலியூர் புருஷோத்தமன், நமச்சிவாயம், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத்தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மற்றும் தொண்டர்கள் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து பஜார் சாலை வழியாக மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதோடு திமுக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். இதில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, ரவி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், கவுன்சிலர்கள் காளிதாஸ், துணைத் தலைவர் கேசவன், அர்ச்சுனன், குப்பன் ஜோதி அமலா சரவணன், ஹரிபாபு, மெய்யழகன், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ், மாதர்பாக்கம் மனோகரன், மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: