பெரியபாளையம்: பெரியபாளையத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் மாதா கோயில் தெருவில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணியும் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் அருட் தந்தை டி.அருள்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜூதா அன்பரசி முன்னிலை வகித்தார். பெரியபாளையம் மின்வாரிய கட்டிடம் அருகே இருந்து துவங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. அப்போது, போதைப் பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷமிட்டவாரும் ஊர்வலமாக பள்ளிக்கு வந்தனர்.