நைரோபி: கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல்வாதியுமான ரெய்லா ஒடிங்கா 2%வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். துணையாதிபராக இருந்த ரூட்டோ அதிபராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தலைநகர் நைரோபியில் உள்ள கேபேரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர்.