டெல்லி: 3ஆம் தரப்பிலிருந்து தலையீடு அதிகபடியாக இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா நடவடிக்கை எடுத்துள்ளது. ஃபிபா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 3ஆம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக சஸ்பேண்ட் செய்வது என ஃபிபா கவுன்சில் ஒரு மித்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளது. இந்த தலையீடானது ஃபிபா அமைப்பின் விதிகளை மீறிய செயல் என கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற அக்டோபர் 11 தேதி முதல் 30 தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை போட்டியில் திட்டமிட்ட படி இந்தியாவில் நடத்தப்பட இயலாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.