ஹல்த்வானி: சியாச்சினில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷனில் பலியான ராணுவ வீரர் உடல் 38 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் கடந்த 1984ம் ஆண்டு‘ஆபரேஷன் மேக்தூத்’என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலா உட்பட 20 கொண்ட வீரர்கள் குழு சென்றது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது பனிச்சரிவில் சிக்கினர். 15 வீரர்கள் உடல் மீட்கப்பட்டது. சந்திரசேகர் ஹர்போலா உட்பட 5 பேர் உடல் கண்டுபிடிக்க முடியவில்லை.