டொரன்டோ: கனடாவில் நடந்த நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பாப்லோ புஸ்டா சாம்பியன் பட்டம் வென்றனர். மான்ட்ரியல் நகரில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் போலந்தின் ஹூபர்ட் ஹுர்கஸ் (25 வயது, 10வது ரேங்க்) உடன் மோதிய பாப்லோ கரெனோ புஸ்டா (ஸ்பெயின், 31வயது, 23வது ரேங்க்) 3-6, 6-3, 6-3 என்ற செட் வென்று முதல் முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 45 நிமிடங்களில்முடிவுக்கு வந்தது.
டொரன்டோ நகரில் நடந்த மகளிர் ஒற்றையர் பைனலில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (30வயது, 15வது ரேங்க்), பிரேசில் வீராங்னை பீட்ரிஸ் ஹடாட் மயா (26வயது, 24வது ரேங்க்) மோதினர்.