உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வாழ்த்து

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26-ம் நீதி ஓய்வு பெறவுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினர்.

மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதன்படி யு.யு.லலித் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு கடந்த 4-ம் தேதி பரிந்துரை வழங்கினார். இந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித்-ஐ நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்:

வழக்கறிஞராகவும், நீதிபதியாக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு நீதித்துறையில் அவர் புதிய உயரத்தை தொடுவார் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: