இங்கிலாந்து: அணுக்கரு பிணைப்பு தொழிநுட்பத்தின் மூலம் அதிக ஆற்றலை உருவாகும் முயற்சியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் சுற்றுச் சூழலை பாதிக்காத எரிசக்தியை கண்டறிவதில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அணுக்களை அதிக வெப்ப நிலையில் இணைப்பது மூலம் அணுக்கருக்கள் இணைந்து ஆற்றல் வெளிப்படுவது வழக்கம் தற்போது வரை அணுக்கரு இணைப்பு மூலம் 22 மெகா ஜூல் ஆற்றலை வெளிக்கொணரப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகளின் பலனாக 59 மெகா ஜூல் ஆற்றல் வெளிகொணரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் அருகே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.