கட்டிடம் இடிந்து விபத்து

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி கிளை எதிரே பழைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 3 கடைகள் உள்ளன. கட்டிடத்தின் ஒரு பகுதி பயன்பாட்டில் இல்லாமல் காலியாக இருந்தது. நேற்று காலை இந்த கட்டிடத்தின் அருகே பைக் பழுது பார்க்கும் கடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 3 மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் பயன்பாட்டில் இல்லாத ஒரு பாதி மட்டும் இடிந்து கீழே விழுந்தது. அப்போது பழைய கட்டிடத்தின் கீழே வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடியதால் உயிர் தப்பினர். புகாரின்படி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: