பெரம்பூர்: பெரவள்ளூர் ஜம்புலிங்கம் மெயின் சாலை டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மாலை பெண் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் கடைக்கு எதிரே வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டினார்.
தகவலறிந்த பெரவள்ளூர் போலீசார் அவரை மீட்டனர். விசாரணையில் பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனி வெங்கடேசன் நகரை சேர்ந்த வேணுகோபாலின் மனைவி செல்வி(45) என்பது தெரியவந்தது. அவரை எச்சரித்து அனுப்பினர்