பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 77வது லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் எடுத்தன. கடைசி வரை த்ரிலிங்காக நடந்த இந்த ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது. அரியானா 14வது போட்டியில் 6 வெற்றி, 5 தோல்வி, 3 டை என42 புள்ளியுடன் 3வதுஇடத்தில் உள்ளது.