ஒன்றிய, மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் வேண்டுகோள்

சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்.  இலங்கை கடற்படையினரின் தாக்குதலோடு இலங்கை மீனவர்களாலும் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டும் வகையிலும் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இடையிலான முரண்பாடுகளை களையவும் ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: