சென்னை: அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோர் நேற்று இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்றும் வகையில், இரட்டை இலை சின்னத்தை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும், இந்தியத் தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சின்னத்தை பெற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்குத்தான் உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.