பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கல் பஸ் டெப்போ பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏடிஎம் மையத்திற்குள் பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது, ஏடிஎம் மையத்திற்குள் ஒருவர் குடிபோதையில் படுத்திருந்தார். இதையடுத்து அந்த நபரை பணம் எடுக்கச் சென்றவர் வெளியே வருமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.