சியோல்: வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. அமெரிக்கா, ஐநா.வின் பொருளாதார தடைகளை மீறி, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, சூப்பர்சோனிக் ஏவுகணை, ரயிலில் வீசக்கூடிய ஏவுகணை போன்றவற்றை கடந்த மாதம் தொடர்ச்சியாக 5 முறைக்கு மேல் வீசி சோதனை செய்தது.