தமிழகம் பழநி அருகே வினோத நோயால் சிறுவன் பரிதவிப்பு: உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை Jul 25, 2021 பழநி: பழநி அருகே வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூரைச் சேர்ந்தவர் காட்டப்பன். பிட்டர் தொழிலாளி. மனைவி செல்வி. மகன் காவியபாலன் (13). சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே வினோதமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். உடல் முழுவதும் தீக்காயம் பட்டதுபோல் இருப்பதால், இதர குழந்தைகளிடமிருந்து பிரிந்து தனித்து வாழும் நிலைக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து காவியபாலனின் தந்தை காட்டப்பன் கூறியதாவது: மனித உடம்பில் தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும். எனது மகனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே உள்ளது. சிகிச்சைக்காக பல இடங்களுக்கு அலைந்து விட்டோம். லட்சக்கணக்கில் செலவழித்து விட்டோம். எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது எனது மகன் 8ம் வகுப்பு படிக்கிறான். வினோத நோயால் உடன் படிக்கும் சிறுவர்கள் இவனை ஒதுக்குகின்றனர். இவனை கவனிப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே மளிகை பொருட்களை வாங்கி, வியாபாரம் செய்து வருகிறோம். கிடைக்கும் வருவாய் உணவிற்கே பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சிகிச்சையை தொடர முடியவில்லை. ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவி புரிய வேண்டும். நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். மனைவி செல்வி பிஏ படித்துள்ளார். இருவரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உதவிக்கு : 97865 92966 (காட்டப்பன்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பரவசம்
இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட 15-சவரன் தங்க நகைகளை காவல் நிலையில் ஒப்படைத்த தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் புதுப்பிக்க ஆணை!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்
ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில் சிக்கிய நடிகையான எம்பி நவ்நீத் நள்ளிரவில் பாஜகவில் ஐக்கியம்: அமராவதி வேட்பாளராக உடனடி அறிவிப்பு
புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை கையகப்படுத்திய விவகாரம்; இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்களுக்கு கண்டனம்: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு