தமிழகம் நாய்கள் கடித்து மான் சாவு Jul 25, 2021 மரக்காணம்: மரக்காணம் அருகே குரும்புரம் பகுதியில் 750 ஏக்கர் பரப்பளவில் அபூர்வ மூலிகை வனம் உள்ளது. இந்த காட்டில் மான்கள், மயில்கள், முள்ளம் பன்றிகள், காட்டு ப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்கு காட்டுப்பகுதியில் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் குடிநீர் தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வருகின்றபோது எதிர்பாராதவிதமாக வாகனங்களில் அடிபடுதல், சமூக விரோதிகளால் வேட்டையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை குரும்புரம் மூலிகை வனத்தில் இருந்து ஒரு புள்ளிமான் அருகில் இருந்த கிராமப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தெரு நாய்களை துரத்திவிட்டு கடுகாயம் அடைந்த புள்ளிமானை மீட்டுள்ளனர். இதுகுறித்து இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாய்கள் கடித்து குதறிய புள்ளிமானை சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவரிடம் எடுத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்துவிட்டது.
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது; திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை..!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்; அரவானின் பிரமாண்ட சிரசு உடன் வலம் வரும் தேர்…ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வழிபாடு..!!
திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்: சித்ரா பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!!